districts

img

மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி, மே 9- கள்ளக்குறிச்சி அரசு  ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தியாகதுருகம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இந்த சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.  இந்த முகாமில் மக்க ளைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருந்து பெட்டகம், டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து உணவு பெட்ட கங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.  அரசு முதன்மைச் செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீரீதர், விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரி யன், வசந்தம் கார்த்திகே யன், ஏ.ஜெ.மணிக்கண்ணன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் க.பூங்கொடி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பெ.புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.