கள்ளக்குறிச்சி, நவ. 16- கூட்டுறவு இயக்கத்தை யும், கூட்டுறவு அமைப்பு களையும் மேம்படுத்து வோம் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். கூட்டுறவுத்துறை சார்பில் 69ஆவது அனைத் திந்திய கூட்டுறவு வார விழா கள்ளக்குறிச்சியில் புதனன்று (நவ. 16) நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் வேலு தலைமை தாங்கி பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதன்முத லாக 69ஆவது அனைத் திந்திய கூட்டுறவு வார விழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நோக்கமே கூட்டுறவு இயக்கத்தையும், கூட்டுறவு அமைப்புகளை மேம்படுத்துவதாகும். தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலன் கருதி விவசாயக் கடன், நடைக் கடன், மகளிர் சுய உதவிக்குழுக்கடன்கள் உள்ளிட்ட கடன்களை முழு வதும் முற்றிலும் தள்ளுபடி செய்தார். கள்ளக்குறிச்சி மண்ட லத்தில் 126 கூட்டுறவு சங்கங்கள் பொதுமக்க ளுக்கு சேவையாற்றி வரு கிறது. மேலும் மாவட்டத் தில் 751 நியாய விலைக்கடை கள் கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்படுகிறது. இக்கடைகளின் வாயிலாக 4,33,269 குடும்ப அட்டை தாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை, பாமாயில், மண் ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் கூறினார். தொடர்ந்து கூட்டுறவுத் துறையில் சிறந்த அலுவ லர்களுக்கு பாராட்டுக் கேடயமும், சான்றும், 100 விழுக்காடு பயோ மெட்ரிக் முறையில் விற்பனை செய்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட 16 சிறந்த சங்கங்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டது. முன்னதாக கூட்டுறவு வார உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சி யர் ஷ்ரவன்குமார், நாடாளு மன்ற உறுப்பினர் ரவிக்கு மார், சட்டமன்ற உறுப்பி னர்கள் உதயசூரியன், கார்த்திகேயன், மணிக் கண்ணன், மாவட்ட ஊராட் சிக்குழு தலைவர் புவனே ஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாரா யணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.