districts

img

கள்ளச்சாரயத்தால் நிலைகுலைந்த கருணாபுரம்

கள்ளக்குறிச்சி, ஜூன் 23 - கள்ளக்குறிச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கருணா புரம்17 வது வார்டு பகுதியில் மெத்த னால் கலந்த பாக்கெட் சாராயத்தை  குடித்து உயிருக்கு ஆபத்தான  நிலையில் கள்ளக்குறிச்சி மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி மாநில பொதுச் செயலா ளர் சாமுவேல்ராஜ் வெள்ளிக் கிழமை (ஜூன் 21)  நேரில் சந்தித்து  ஆறுதல் கூறினார். 

அப்போது ஒரே குடும்பத்தைச் சார்ந்த கணவர் சுரேஷ் (வயது 40), மனைவி வடிவுக்கரசி (வயது 32) இருவரும் இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்த நிலையில் அவர்களது குழந்தைகளான கோகிலா 16, ஹரிஷ் 14, ராகவன் 13 ஆகியோர் தற்பொழுது தந்தை வழி பாட்டி யான ராணி பராமரிப்பில் உள்ள னர். இவர்களுக்கு சொந்தமான வீடு  கிடையாது. எனவே அரசு கருணை கூர்ந்து இந்த குழந்தை களின் வாழ்வியலை கருத்தில் கொண்டு இவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்று சாமுவேல்ராஜ் கேட்டுக்கொண்டார்.

 அரசு பள்ளிக்கூடத்தில்படித்துக் கொண்டிருக்கும்  குழந்தைகள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து படிக்க நிரந்தரமாக வசிக்க வீடு ஒன்றும் வேண்டும் என்று  அக்குழந்தைகளின் பாட்டி கோரிக்கை விடுத்தார். 

இந்த சம்பவத்தில் நாகப்பில்லை 31 வயது உடையவர் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தார். இவர் ஏற்கனவே ஊனமுற்றவர். ஒற்றை கையுடன் சுண்ணாம்படிக்கும் தொழிலை செய்து வந்தார். இவ ருக்கு திருமணம் ஆகி சில நாட்களே ஆன நிலையில் திலகவதி  (28)  என்ற மனைவியும் மணிமாறன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.  இவர்கள் கதறி அழுத காட்சி பார்ப்போரின் கண்களை கலங்கச் செய்தது. 

இந்த சம்பவத்தில் ராணி என்பவர் தன்னுடைய மகன், மருமகள் இருவரும் இழந்த நிலை யில் தனது மூன்று பேரப்பிள்ளை களையும் படிக்க வைக்க முடியாத சூழ்நிலை இருப்பதாக கதறி அழுதார். அவருக்கு ஆறுதல் கூறிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜி ஆனந்தன், குழந்தைகளின் படிப்புச் செலவை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் ஏற்கும் என்று  உறுதியளித்தார்.

சமூக விரோத கும்பலால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் பாக்கெட் கள்ளச்சாராயம் என்பது தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.  உயிரிழந்த 53 பேரில் பெரும்பாலானோர் பட்டியலின மக்கள். இவர்கள் அன்றாட தின கூலி வேலை செய்பவர்கள்.  மூட்டை தூக்குதல். துப்புரபு பணிகளை செய்து வருகிறார்கள். 
 

இந்த பகுதியில் வசிக்கக்கூடிய பெரும்பாலான ஏழை மற்றும் கூலி தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனர்.  இதில் சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்த இஸ்லாமியர் இருவரும் உயிரிழந்தனர்.  
18 ஆம் தேதி தேதி காலையில் கிருஷ்ணமூர்த்தி (65)  என்பவர் உயிருக்கு போராடிய நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்து விட்ட சூழ்நிலையில் அவர் கள்ளச்சாராயம் குடித்துதான் இறந்தார் என்ற தகவலை அறிந்துகொள்ளாமல் துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஏற்கனவே வாங்கி வைக்கப்பட்டிருந்த சாராய பாக்கெட்டுகளை பயமின்றி குடித்ததின் விளைவாக உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மளமளவென உயரத் தொடங்கியது.

விஷச்சாராயம் அருந்தியவர்கள் குற்றவாளி அல்ல:
விற்பனையை கண்டு கொள்ளாதவர்களே குற்றவாளிகள்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் நாகரீக சமூகத்திற்கு விடப்படுகிற கேள்வி ஆகும்.50 ம் மேற்பட்டோரைப் பலி கொடுத்துள்ள கருணாபுரம் மட்டுமல்ல மாவட்டத்தின் வேறு சில இடங்களிலும் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.எவ்வித அச்சமும் இன்றி தங்குதடையின்றி கருணாபுரத்திலும்  வேறு சில இடங்களிலும் கள்ளச்சாராய விற்பனை கொடி கட்டிப் பறக்கிறது. 

போதைப் பொருட்கள் வியோகம் என்பது பிரதானமான வணிகமாக மாறி வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் குறிவைக்கப்பட்டு பல்வேறு பெயர்களில், பல்வேறு வடிவங்களில் போதைப்பொருட்கள் விநியோகம் நடைபெறுகிறது.அவ்வாறே ஏதுமற்ற கிராம்புற உழைப்பாளி மக்களைச் சந்தையாக்கி  கள்ளச்சாராய விற்கனையில் கோடிக்கணக்கில் கள்ளச்சாராய பணம் புரள்கிறது.

பலமான அரசியல் செல்வாக்கும்,அதிகார வர்க்கத்தின் ஆதரவும் இதற்கு பின்புலமாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை.எனவே கள்ளக்குறிச்சி மட்டுமல்ல மாநிலம் முழுவதும் இத்தகைய போதைப் பொருள் விற்பனையாளர்கள் மீதும் அதற்கு பின்புலமாக இயங்குகிற சக்திகள் மீதும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

( கே.சாமுவேல்ராஜ் பேட்டியிலிருந்து)