கள்ளக்குறிச்சி, அக்.30- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள இரவார் கிரா மத்தை சேர்ந்த விவசாயி ரவி. இவரது மகள் பைரவி (18). இவர் அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுதினார். ஆனால் அதில் குறைந்த மதிப்பெண் பெற்றார். இதனால் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அவர் கடந்த வாரம் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்து குடித்தார்.
பின்னர் மருந்து குடித் ததை வீட்டில் கூறாமல் வயிற்று வலி என்று பெற் றோரிடம் கூறி வந்தார். இதையடுத்து அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித் துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் அக்.30 அன்று அதிகாலை 2.30 மணிக்கு இறந்தார்.
மேலும், மருத்துவ மனையின் முன்பு உறவினர் கள் திரண்டதால் பாது காப்புக்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.