districts

img

கள்ளக்குறிச்சி மாவட்டம் புத்தனந்தல் அணை பணிகள்: ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி,ஜூன்30 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம் புத்த னந்தல் கிராமத்தில் நீர்வளத் துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புத்தனந்தல் அணையின் பணிகள் குறித்தும் திறக்கப்படும் காலம் குறித்தும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஜோதிராமன், மாவட்ட ஆட்சியரிடம் சில கேள்விகளை முன் வைத்தார். இதையடுத்து, அந்த பணிகளை ஆட்சி யர் பார்வையிட்டார்.

 திரு நாவலூர் ஒன்றியத்திற் குட்பட்ட புத்தனந்தல் கிராமத்தில் கடந்த 1954 ஆம் ஆண்டு கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அணை இது. இந்த அணையை புதுப்பிக்கவும் பராமரிக்கவும் மதகுகளை சீரமைக்கவும், வாய்க்கால் வரத்துக்களை தூர்வாரவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருநாவலூர் மேற்கு ஒன்றியம் சார்பில் போராட்டம் நடத்தப் பட்டது. மேலும், முதல மைச்சருக்கும் கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ. 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி, நடை பெற்று வரும் பணிகளை பார்வையிடுவதற்காக சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற ஆட்சியர் அணையை பார்வையிட்டார். அப்போது, விவ சாய சங்கப் பிரதிநிதிகளு டன் ஆட்சியர் கலந்துரை யாடினார். மேலும் அணைக்கட்டு பணியை விரைவாக முடித்து விவ சாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வு பய ணத்தின் போது  நீர் வழித்தடங்களில் ஆக்கிர மிப்புகளை பார்வையிட்ட ஆட்சியர், உடனடியாக அகற்றுமாறு நீர்வள துறை அதிகாரிகளிடம் அறி வுறுத்தினார்.  இதில் நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் மோகன், கரும்பு விவ சாயிகள் சங்க மாநில செயலாளர் ஜோதி ராமன்,மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர்  விவசாய தொழிலாளர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.