districts

img

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கே.பாலகிருஷ்ணன் நேரில் ஆறுதல்

கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வியாழனன்று (ஜூன் 19) சந்தித்து ஆறுதல் கூறினார்.

பலி எண்ணிக்கை அதிகரித்துள்ள கள்ளக்குறிச்சி ஏழாவது வார்டு கருணாபுரம் பகுதிக்கு கே. பாலகிருஷ் ணன் சென்றார். அங்கு கணவன் - மனைவி இருவரும் உயிரிழந்த இல்லத் தில் அவரது உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்பொழுது கதறி அழுத உற வினர்கள், அரசு எங்களுக்கு ஏதேனும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்; எங்களைப் போன்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு சலுகைகள் அளிக்க வேண்டும் என்றனர்.

மரண ஓலம் ஒலித்துக் கொண்டி ருந்த அடுத்தடுத்த வீடுகளுக்கும் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப் போது, இளம் விதவை ஒருவர் கதறி அழுத காட்சி நெஞ்சை உறையச் செய்தது. அவருக்கு ஆறுதல் கூறிய கே. பாலகிருஷ்ணன், அரசிடமிருந்து உதவிகள் கிடைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும் என்றார். 

அவருடன் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என். சுப்பிர மணியன் உள்ளிட்டோர் சென்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தி யாளர்களைச் சந்தித்த கே. பால கிருஷ்ணன், “கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலிக்கு காரணமான அனை வரையும் கைது செய்ய வேண்டும். ஆட்சியரை பணியிட மாற்றம் செய்வ தும், போலீசாரை சஸ்பெண்ட் செய்வ தும் மட்டுமே போதாது” என்றார்.

கள்ளச்சாராயம் அருந்தி பலியான வர்களின் குடும்பங்களை அரசு காப்பாற்ற வேண்டும். என்றும் அவர் கூறினார். 

வீடு வீடாக அதிகாரிகள் ஆய்வு

கள்ளச்சாராயம் குடித்ததில் பாதிக் கப்பட்டவர்கள் சிலர் உயிருக்குப் பயந்து மருத்துவமனை செல்லாமல் வீடுகளில் பதுங்கி இருப்பது குறித்து சுகாதாரத் துறைக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்ற சுகாதாரத் துறையினர், வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தனர். 

அப்போது, சிலரைக் கண்டுபிடித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

இதனால், அந்தப் பகுதி யில் ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் பல மணி நேரம் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

சுகாதாரத்துறையின் இந்த நட வடிக்கையைத் தொடர்ந்து, மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் எண்ணி க்கையும் உயிர்ப் பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் பதற்றம் அதி கரித்துள்ளது. 

இதையடுத்து, மூன்று மாவட்டங் களில் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.