districts

img

புத்தகம்தான் மனிதனை பண்படுத்தும் கள்ளக்குறிச்சி புத்தக விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

கள்ளக்குறிச்சி, 16- கள்ளக்குறிச்சியில் மாவட்ட நூலகத் துறை சார்பில் கல்லை புத்தகத் திருவிழா டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சென்னை புறவழிச்சாலை திடலில் நடைபெறுகிறது. அதன் தொடக்க விழா வியாழனன்று (டிச. 15) நடைபெற்றது. பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “கண்ணுடையார் என்போர் கற்றோர், முகத்தில் இரண்டும் புண்ணுடையார் கல்லாதவர் என்று திருக்குறள் சொல்கிறது. இதற்கு காரணம் புத்தகம் படிக்கும் பழக்கத்தினால் தான் வாழ்விலும், பொருளாதாரத்திலும் வளர்ச்சி அடைய முடியும்”என்றார். படித்தால் தான் சமுதாயத்தில் ஒரு சமநிலையை உருவாக்க முடியும். பொது அறிவு, வேலைவாய்ப்பு ஆகிய வற்றை புத்தகங்களை படிப்பதன் மூலமாக மட்டுமே நாம் பெற முடியும் என்று கூறிய அமைச்சர் இங்கு புத்தகத் திருவிழா நடத்துவதற்கு முதல மைச்சர் ரூ. 12 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், கார்த்திகேயன், மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.