districts

img

ஆசிரியர்களுக்கான மறு நியமனப் போட்டி தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி, அக். 31- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரி யர்களுக்கான மறு நியமனப் போட்டி தேர்வு என்ற அரசாணை எண்.149ஜ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் குமார் தலைமை யில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திங்களன்று (அக். 31) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 2021 சட்டமன்ற தேர்த லில் திமுக தேர்தல் அறிக்கை 177- ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனை வருக்கும் பணி வழங்க வேண்டும், பணி நியமனத்தின் போது பழையபடி வயது தளர்வு அளிக்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்ட மைப்பு அமைப்பாளர் அருள், மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஜெய்சங்கர். விசிக மாவட்டச் செயலாளர் தனபால், ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில இணைப் பொதுச் செயலாளர் செல்வராசு, மாநில துணைச் செயலாளர் ரஹீம், ஒருங்கிணைப்பாளர் கலாநிதி, உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். முன்னதாக திரு மூர்த்தி வரவேற்றார். தமிழரசன் நன்றி கூறினார்.