கள்ளக்குறிச்சி,மார்ச் 3- பூம்பூம் மாட்டுக்காரர்க ளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மனு கொடுத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம், செம்பி யன்மா தேவி ஊராட்சி பரமேஸ்வரி மங்கலம் கிராம எல்லையில் 15க்கும் மேற்பட்ட இந்து ஆதியன் பூம்பூம் மாட்டுக்காரர்கள் 12 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். ஓடை புறம்போக்கு நிலத்தில் சிமெண்ட் சீட்டு, தார்ப்பாய், துணி, கீற்றால் கொட்டகை அமைத்து குடியிருந்து வருகிறார்கள். வெயில், மழை, புயல் காலங்களிலும் பாது காப்பற்ற சூழலில் குடி யிருந்து வருகின்றனர். இந்நிலையில், பர மேஸ்வரி மங்கலம் கிராம எல்லையிலுள்ள சர்வே எண் 48/1பி, 69/2 தரிசு நிலத்தை ஆர்ஜிதம் செய்து குடியிருக்க மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். மாவட்டச் செயலாளர் டி. எம்.ஜெய்சங்கர், ஒன்றி யச் செயலாளர் வி.ரகு ராமன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே. ஜெயமூர்த்தி, கே. அஞ்சலை, கிளைச் செயலாளர்கள் கே.ரங்க துரை, எம்.முத்து, கே. செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.