கள்ளக்குறிச்சி, ஏப். 10 - கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் பயன்பாட்டுக்காக மேலும் 4 அவசர ஊர்தி களின் சேவையை பொதுப்பணித் துறை அமைச்சா ஏ.வ.வேலு சனிக்கிழமையன்று (ஏப்.10) கொடியசைத்து தொடக்கி வைத்தார். 75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை யொட்டி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் ஏப்.4 அன்று கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சி யர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கே.சரவணன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலு 4 அவசர ஊர்திகளின் பயன்பாட்டை கொடியசைத்து தொடக்கி வைத்தார். அரசின் திட்டங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, அரங்கு களை அமைத்த துறை யினருக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர்கள் தா.உதயசூரியன், க.கார்த்திகேயன், ஏ.ஜெ.மணிக்கண்ணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சு.செல்வக்குமார், திட்ட இயக்குநர் இரா.மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) டி.சுரேஷ், கள்ளக் குறிச்சி ஒன்றியக் குழுத் தலைவர் அலமேலு ஆறு முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சிவக்குமார் நன்றி கூறினார்.