districts

img

தென் பெண்ணையில் வெள்ளப்பெருக்கு

கள்ளக்குறிச்சி, செப்.9- திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 17,000 கன அடி தண்ணீர் ஆனது வெள்ளமாக பெருக் கெடுத்து ஓடுகிறது இரு கரையையும் ஆக்கிரமித்து ஓடும் இந்த வெள்ள நீரானது திருக்கோவிலூர் அர கண்டநல்லூரை இணைக்கும் தரைப் பாலத்தின் மீது சுமார் 2 அடிக்கும் மேலாக பாய்ந்து செல்கிறது.  தண்ணீரின் வேகம் அதிக மாக இருக்கின்ற காரணத்தி னால் திருக்கோ–விலூர் கீழையூர் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து சென்று விட்டது. இதனால் இனி தரைப் பாலத்தை பொது–மக்கள் போக்கு வரத்திற்கு பயன்படுத்த முடியுமா என்பது கேள்விக்  குறியே என்ற நிலைக்கு தரைப்பாலம் உள்ளாகி யுள்ளது.  மேலும் தரைப் பாலத்தின் மீது ஓடும் தண்ணீரின் அளவு அதி கரித்த வண்ணம் உள்ளதால் தரைப் பாலத்தின் 2 பக்கத்திலும் காவல் தடுப்பு வேலி அமைத்து பாது காப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். இந்த தண்ணீர் கடலூர் ஆல்பேட்டைவழியாக கடலில் கலக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதி கரித்து உள்ளதால் ஆற்றோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

;