கள்ளக்குறிச்சி,ஜூலை1- கள்ளக்குறிச்சி பாரதி கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் பள்ளிகளில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு களில் படித்த மாணவர்கள் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும் பாரதி கல்வி நிறுவனத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். அந்த மாணவர்க ளுக்கும் துணையாக இருந்த ஆசி ரியர்களுக்கும் கல்வி நிறு வனத்தின் செயலாளர் டாக்டர் கே.லட்சுமி கந்த சாமி பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். அப்போது பேசிய லட்சுமி, “பாரதி கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஏழை-எளிய மாணவர்கள் வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளை படைக்க பத்தாம் வகுப்பு மதிப் பெண் அடிப்படையில் 11 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படும்” என்றார். இந்த நிகழ்வின்போது பாரதி கல்வி நிறுவனத்தின் தாளாளர் கே.கந்தசாமி, ஆக்ஸாலிஸ் சர்வதேசப் பள்ளியின் தாளாளர் கே.பரத்குமார், பாரதி பள்ளியின் முதல்வர் கே.ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.