districts

img

கள்ளச்சாராய வியாபாரத்தை தடுக்க தவறிய அரசு நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, ஜூன் 21- கள்ளச்சாராய வியாபாரத்தை தடுக்கத்த வறிய மாவட்டநிர்வாகத்தையும் காவல் துறையையும் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பல  இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த ஏழைத் தொழிலாளர் குடும்பத்திற்கு வேலைவாய்ப்புடன் கூடிய 25 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும்,  சாராயவியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த காவல்துறையினர் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சங்கரா புரத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் முரளி  தலைமை தாங்கினார்,மாவட்ட தலைவர்  மு.சிவக்குமார் பங்கேற்றார்.  உளுந்தூர் பேட்டையில் நகர செயலாளர் சதீஷ்குமார்  தலைமை தாங்கினார், மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி கலந்துகொண்டார்.  பகண்டை கூட்ரோட்டில் ஒன்றிய செயலாளர்  சுந்தரமூர்த்தி தலைமையில்  மாவட்ட துணைச் செயலாளர் உத்திரக்கொட்டி பங்கேற்றார்.