districts

img

முற்றுகைப் போராட்ட அறிவிப்பு எதிரொலி: அமைதிப் பேச்சுவார்த்தையில் சாலையை சீரமைக்க உறுதி

கள்ளக்குறிச்சி,ஏப்ரல்,3- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம், பு. மாம்பாக்கம் கிராம ரயில்வே கேட்டில் சுரங்க பாலம் அமைப்பதற்கு ரயில்வே நிர்வாகம் பள்ளம் தோண்டியது. மேற்கொண்டு பணியை தொடராமல் மூன்று மாதத்திற்கும் மேலாக கிடப்பில் போட்டது. இத னால், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் நட வடிக்கை எடுக்காத தெற்கு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் 10 கிராம மக்கள் ரயில் நிலை யத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்த னர். இதனையடுத்து, திங்க ளன்று (ஏப். 3) திருக் கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமை யில் அமைதிப் பேச்சு நடை பெற்றது. போராட்டக் குழு சார்பில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜெ. ஜெயகுமார், மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சாமிநாதன்,மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன்,ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஏ.குடி யரசு மணி,டி. ராஜீவ்காந்தி, டி.முருகன்,வி, கலைச் செல்வி, ஆர்.பரிமளா, வட்டாட்சிர் ராஜி, காவல்துறை கண்காணிப் பாளர் மகேஷ், ரயில்வே திருச்சி கோட்ட பொறி யாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். பு. மாம்பாக்கம் கிராமத்தில் ரயில்வே கேட், சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு தேவையான அனைத்து கட்டுமான பொருள்களும் கொண்டுவரப்பட்டு பணி கள் நடைபெற்று வருகிறது.  ஜுன் இறுதிக்குள் முடித்து தரப்படும் என்றும் சுரங்கப் பாதையின் அளவு 5.5 மீ உயரமும் அகலம் கொண்டது என்றும் ரயில்வே அதிகாரி தெரிவித்தார். மாம்பாக்கத்திலிருந்து உளுந்தூர்பேட்டை செல்வதற்கான சாலையை சீரமைத்து தரப்படும், மாம்பாக்கத்திலிருந்து பால் பண்ணை வழியாக செல்லும் சாலையும் உடன டியாக சரி செய்து தரப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனையடுத்து, போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது.