கள்ளக்குறிச்சி.ஜன.9- கள்ளக்குறிச்சி மாவட் டம், கல்வராயன் மலையில் பல ஆண்டுகளாக விவ சாயம் செய்து வரும் மலை வாழ் மக்களை வெளி யேற்ற முயற்சிக்கும் வனத் துறையை கண்டித்தும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் திங்க ளன்று (ஜன.9) பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது. கல்வராயன் மாலையில் உள்ள 13ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை பல ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் உழுது பயிர் செய்து வருகின்றனர். தற்போது வனத்துறையும் வருவாய்துறையும் மலை வாழ் மக்கள் நிலத்தினை காப்புக்காடாக மாற்றி அரசிதழில் வெளி யிட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும், வன உரிமைச் சட்டம் 2006 இன் படி மலைவாழ் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், அளவீடு செய்யப்பட்ட இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும். கல்வராயன் மலையில் உள்ள அனைத்து கிராமங்க ளிலும் உள்ள அளவீடு செய்யாத நிலங்களையும் உடனே அளவீடு செய்து வனவுரிமை பட்டா வழங்கவேண்டும். இன்னாடு பகுதி கீழ்நிலகூர், மேல்நிலவூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய பயிர்களை வனத்துறை அதி காரிகள் அத்துமீறி சேதப்படுத்தி அராஜகம் செய்து வருவதை தடுத்து நிறுத்தவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
கல்வராயன் மலையும் கம்யூனிஸ்ட்டுகளும்... |
போராட்டத்திற்கு கட்சியின் மாநிலச் செயலாளர். மு.பாலகிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு கல்வராயன் மலைவாழ் மக்களை வனத்துறை கடுமையாக தாக்கிய போது தோழர் பாஷா ஜான் அம்மக்களை திரட்டி போராடிய போது நானும் அதில் கலந்து கொண்டு அந்த அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். கல்வராயன் மலை இரண்டு ஜாகிர்தாரர்களுக்கு சொந்த மாக இருந்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் 1976 ஆம் ஆண்டு நாடாளு மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது. தோழர் ஏ.கே. கோபாலன் போன்ற தோழர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்கள். இதன் பின்னர் தான் அரசு கட்டுப்பாட்டிற்குள் கல்வராயன் மலை கொண்டுவரப்பட்டது. வரலாறு தெரியாத அதிகாரிகள் இந்த மலைப்பகுதிக்கு வனத்துறை சமீபத்தில் தான் வந்தது.மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தில் இடதுசாரிகளின் பங்களிப்பு பற்றி தற்போதைய வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியாது. தலைமுறை தலைமுறையாக வசிக்கும் குடும்பங்களையும் ஆதிவாசி பெண்களையும் மிரட்டுவது போன்ற தவறான நடவடிக்கைகளில் வனத்துறை ஈடுபட்டால் அதை தடுக்கும் முயற்சியில் சிபிஎம் ஈடுபடும். தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் ஆதிவாசிகளுக்கு வழங்க வேண்டிய பட்டாவை வழங்காமல் காலதாமதம் செய்வதோடு வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தனிநபரான வினோத் கந்தையா என்பருக்கு வருவாய் துறையின் 36 ஏக்கர் நிலத்தை பட்டா போட்டு தந்தது தவறு என்பதை நீதிமன்றத்திற்கு சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிருபித்தது. நீதிமன்ற ஆணையை கூட மதிக்காமல் இன்னமும் அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தாமல் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்டு அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தரவேண்டும் என்பது மார்சிஸ்ட்கட்சியின் கோரிக்கையாகும். தேவை ஏற்பட்டால் இந்த கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றார் பாலகிருஷ்ணன். |
பேச்சுவார்த்தை
மாவட்ட ஆட்சியர் ஷ்வரன் குமார் முன்னி லையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தாம் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே மலை வாழ் மக்களுக்கு 2 ஆயிரம் சாதி(எஸ்டி) சான்றி தழ்கள்வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார். இரண்டு வட்டாட்சியர் களை சிறப்பு அதிகாரி களாக கல்வராயன் மலைக்கு அனுப்பி அங்கு ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் மலைவாழ் மக்கள் 2005ஆம் ஆண்டு சாகுபடி செய்ததற்கான சரியான ஆவணங்கள் இருந்தால் அதனை பெற்று பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கிராம சபை கூட்டத்தில் அத்தாட்சி பெற்று தீர்மானம் நிறை வேற்றுவது என்றும் அவர் தெரிவித்தார். இந்தப் பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முழுமையாக முடித்து அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் என்று சிபிஎம் தலைவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறினார். இந்த பேச்சுவார்த்தை யில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, டில்லிபாபு, மாவட்டச் செய லாளர் எம்.ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்ன தாக நடைபெற்ற போராட்டத் தில் 2000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைக்கு வலு சேர்த்தனர்.