districts

img

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் வேலு, செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் முத்துவேல் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.