districts

கள்ளக்குறிச்சியில்  ஜூன் 24இல் குறைதீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி, ஜூன் 21- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் ஜூன் 24 அன்று நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 24ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள வேளாண் மற்றும் உழவர் நலம், தோட்டக்கலை துறை. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம். வேளாண்மை பொறியியல்,கால்நடை பராமரிப்பு துறை.  கூட்டுறவு, வருவாய், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை. அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆகவே விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகளை தெரிவித்தும், தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;