கள்ளக்குறிச்சி, ஜூன் 19- கள்ளக்குறிச்சி அருகே கள்ளச் சாராயம் குடித்த 13 பேர் உயிரி ழந்துள்ளனர். மேலும் 4 பெண்கள் உட்பட 45க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற் பனை செய்யப்பட்டு வருவதாக வும், இதில் கள்ளக்குறிச்சி நக ராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாத வச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதில், வயிற்று வலி மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டவர்கள், உடனடியாக அருகில் உள்ள கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தனர். மேலும் 4 பெண்கள் உட்பட 45-க்கும் மேற்பட்டோர் கள்ளக் குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
மேலும், 16 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும், ஒருவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கும், மேலும் பலர் சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப் பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 சிறப்பு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆட்சியர் அதிரடி மாற்றம்
இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை ஷ்ரவண் குமார் ஜடாவத்தை பணியிடமாற்றம் செய்தும் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை சஸ்பெண்ட் செய்தும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், கள்ளக் குறிச்சி மதுவிலக்குப் பிரிவையே கூண்டோடு சஸ்பெண்ட் செய்துள்ள அவர், வழக்கையும் சிபிசிஐடி யிடம் ஒப்படைக்க ஆணை பிறப் பித்துள்ளார்.
இதனிடையே, பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் (எ) கண்ணுகுட்டி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாக்கெட் சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பதையும் கண்டறிந்துள் ளனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக : சிபிஎம்
“இந்த கொடிய சம்பவம் பெரும் அதிர்ச்சி யளிப்பதாகவும், கடந்த ஆண்டு மரக் காணம், மதுராந்தகம் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்த சூழ்நிலையில், தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந் துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்கவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப் படையில் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோ ருக்கு தரமான உயர் சிகிச்சை வழங்கிடுவதோடு, உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதாக வும் தெரிவித்துள்ளார்.
“ஏற்கனவே கள்ளச்சாராயம் விற்பதும், அதனால் ஏழை கூலித் தொழிலாளிகள் உயிரிழந்த தும், பாதிப்பு ஏற்பட்டதும் தமிழகத்தை உலுக்கி யுள்ள நிலையில் காவல்துறையின் மெத்தனம் மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் கூட்டு ஆகியவை இல்லாமல் கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே, கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் கடமை தவறிய காவல்துறையினர் உட்பட தவறிழைத்தவர்கள் அனைவரின் மீதும் பாரபட்ச மின்றி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வும், கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் கூடுதல் கண் காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மதுவிலக்கு தனிப்பிரிவை தீவிரப்படுத்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என்றும் கே. பாலகிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.