கள்ளக்குறிச்சி,செப். 26- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிலவும் தீண்டாமை கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள்ளக்குறிச்சி மாவட்ட மாநாடு வலியுறுத்தி யுள்ளது. சங்கத்தின் 4ஆவது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் வி.ராஜா தலை மையில் நடை பெற்றது. கே.வேலாயுதம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ஏ.நடேசன் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். மாவட்டச் செய லாளர் பி.தெய்வீகன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். பல்வேறு அமைப்பு களின் நிர்வாகி கள் ஐ.ஜேக்கப்ஆயர், மருத்து வர் வி.உதயகுமார், பி.உசேன், மு.தனபால், அ.மனமோகனதாஸ், இளங்கோ, ராமசாமி, கே.ஏழுமலை, வேடியப்பன், ஜார்ஜ் வாஷிங்டன், பிரபு ஆகியோர் பல்வேறு நூல்களை வெளியிட்டனர். சிபிஎம் மாவட்டச் செய லாளர் டி.எம்.ஜெய்சங்கர், சகோதர அமைப்புகளின் நிர்வாகிகள் பி.சுப்பிர மணியன், ஏ.வி.ஸ்டாலின் மணி, எம்.செந்தில், எம்.ஆறுமுகம், எம்.கே.பழனி, ஏ.தேவி, வி.சின்னராசு, ஜி.அருள்தாஸ், கு.சுதா, பி.மணி, என்.தனலட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். மாநில பொதுச் செய லாளர் கே.சாமு வேல்ராஜ் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். இரா.பூமாலை நன்றி கூறி னார். முன்னதாக கள்ளக் குறிஞ்சி கலைக்குழுவின ரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தீர்மானங்கள்
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் நிறை வேற்ற வேண்டும், பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர் களிடம் இருந்து மீட்டு நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்க வேண்டும், ஆதி திராவிட நலத்துறை மூலம் வழங்கப்பட்ட அனைத்து வீட்டுமனை பட்டாக்களையும் வரு வாய்த்துறை கணக்கில் ஏற்ற வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டி யலின மக்கள் பிரதிநிதிகள் எந்த அச்சுறுத்தலுமின்றி நிர்வாகத்தை நடத்த நட வடிக்கை எடுக்க வேண்டும், இருளர் பழங்குடி மக்களுக்கு சாதிச் சான்று வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
நிர்வாகிகள்
31 பேர் கொண்ட புதிய மாவட்ட குழுவிற்கு தலைவராக வி.ராஜா, செயலாளராக வி.ஏழுமலை, பொருளாளராக பி.தெய்வீகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.