கரூர், மார்ச் 2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு கூட்டம் கரூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.முத்துச்செல்வன் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் மாநிலக்குழு முடிவுகளை விளக்கி பேசினார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு எதிர்காலப் பணிகள் குறித்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.கந்தசாமி, ஜி.ஜீவானந்தம், பி. ராஜு, கே.சக்திவேல், சி.முருகேசன், பி.ராமமூர்த்தி, சி.ஆர்.ராஜாமுகமது மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கரூர் மாநகராட்சி 41 ஆவது வார்டில் எம்.தண்டபாணி, புகளூர் நகராட்சி 22 ஆவது வார்டில் இந்துமதி அரவிந்தன், அரவக்குறிச்சி பேரூராட்சி 1 ஆவது வார்டில் கே.வி. கணேசன், பழையஜெயங்கொண்டம் பேரூராட்சி 10 ஆவது வார்டில் தேவி நாகராஜன் ஆகியோர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.