districts

காவிரியிலிருந்து கடலில் கலக்கும் நீரை அணைக்கட்டுகள் அமைத்து சேமிக்க வலியுறுத்தல்

கரூர், அக்.17 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் 1-வது வட்டக் கிளையின் பேரவை கூட்டம் கரூர் உழவர் சந்தை அரு கில் உள்ள சங்க கூட்ட ரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டத் தலைவர் ஆர்.சிவக்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.ராஜ குரு வரவேற்றார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க  மாவட்ட துணைச் செயலா ளர் எல்.பாலசுப்பிரமணி பேரவையை துவக்கி வைத்து பேசினார். மாநிலத் துணைத் தலைவர் ஞானத் தம்பி, மாவட்ட செயலா ளர் கே.சக்திவேல், மாவட்ட  தலைவர் எம்.சுப்பிரமணி யன் ஆகியோர் பேசினர். வட்ட இனச் செயலாளர் பி. ஜமுனாராணி நன்றி கூறினார். கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பணிபுரியும் ஊழி யர்களுக்கு படிகள்  உயர்த்தப்படவில்லை. உட னடியாக படிகளை உயர்த்த வேண்டும். கரூர் வணிக வரித்துறை அலுவலகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பெண்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு விருப்ப பணி மாறுதல் நடத்திட வேண்டும்.  கரூர் மாநகரில் பல்வேறு  அரசு அலுவலகங்கள் தனி யார் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படும் அலுவலகங்களை கரூர்  மாநகராட்சி அலுவலகத்திற்கு பின்னால்  காலியாக உள்ள கட்டி டங்களில் செயல்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, கிராம உதவியாளர் பணியா ளர்களை அரசு ஊழியராக நிரந்தரம் செய்ய வேண்டும். மழைக்காலங்களில், காவிரி  ஆற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண் ணீரை, கரூர் மாவட்டத்தில் பல்வேறு அணைக்கட்டுகள் அமைத்து சேமிக்க வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.