districts

சொந்தமாக மின் உற்பத்தி செய்ய மின் நிறுவுதிறன் பணிகள் துவங்கின அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கரூர், மே 20 - அடுத்த 5 ஆண்டுகளில் மின்வாரியம் மூலம் சொந்த மாக 6220 மெகா வாட் மின்  உற்பத்தி செய்ய மின் நிறுவு திறன் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கரூரில் சமீபத்தில் தெரிவித்தார். கரூர் காமராஜர் மார்க் கெட்டில் புதிதாக ரூ.6.75 கோடி மதிப்பில் காய்கறி அங்காடிகள் கட்டுவதற்கான பூமி பூஜையை மே 18 அன்று துவக்கி வைத்த அவர்  செய்தியாளர்களிடம் கூறிய தாவது:  1945, 1947-ல் அமைக்கப் பட்ட கரூர் காமராஜர் மார்க்கெட் புதிய வணிக  வளாகமாக மாற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை  நிறைவேற்ற, 6.75 கோடி  நிதி ஒதுக்கி 174 கடைகள்  கட்டப்படும் பணிகள் மே 18  அன்று தொடங்கப்பட்டுள் ளன. இந்த மார்க்கெட்டின் வணிகர்கள் கோரிக்கையை ஏற்று முதல்வர் இந்த  கோரிக்கையை நிறைவேற்றி யிருக்கிறார். ஒன்றரை ஆண்டுக்குள் இந்த பணிகள்  முடிக்கப்படும்.  200 ஏக்கரில் சிப்காட், புதிய வேளாண்மைக் கல்லூரி, குளித்தலையில் ரயில்வே மேம்பால பணி,  கதவணைகள் என கரூர்  மாவட்டத்திற்கு 4 தொகுதி களுக்கும் ஒருசேர பணி களை வழங்கியிருக்கிறார்.

புதிய பேருந்து நிலையத் திற்கு டிபிஆர் தயாரிக்கும்  பணிகள் தொடங்கப்பட்டுள் ளன. 20 நாட்களுக்குள் இந்த பணி முடிந்தபின் டெண்டர் விடப்பட்டு பணி கள் தொடங்கப்படும். குஜராத் உள்ளிட்ட மாநி லங்களில் நிலக்கரி தட்டுப்பாட் டால் தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டை அறிவித்தன. ஆனால் முதல்வர் மு.க. ஸ்டாலினின் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் எந்த மின்வெட் டும் அறிவிக்கப்படவில்லை. சர்வதேச சந்தையில் நிலக்கரி  விலை அதிகரித்தபோதிலும், முதல்வரின் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையால் 4, 80,000 டன் நிலக்கரி குறைந்த  விலையில் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளோம். காற் றாலை, சூரிய மின்சக்தி மூலம் உற்பத்தி செய்யக் கூடிய மின்சாரத்தை முழு மையாக பயன்படுத்தி வரு கிறோம்.  அடுத்த 5 ஆண்டுகளில் 6220 மெகாவாட் அளவிற்கு சொந்தமாக மின் உற்பத்தி செய்ய மின் நிறுவுதிறன் பணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது மொத்த உற்பத்தியில் மின் வாரியத்தின் சொந்த உற்பத்தி 25 விழுக்காடுதான் உள்ளது. அடுத்து 5 ஆண்டு களில் 50 விழுக்காடு உயர்த்த நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. 24,000 மின் மாற்றிகள் ஒரே ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சம் விவசாயிகளுக்கு 6 மாதங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண் டில் 50,000 பேருக்கு மின்  இணைப்பு வழங்குவதற் கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறி னார். பேட்டியின் போது மாவட்ட  ஆட்சியர் மருத்துவர் த.பிரபு சங்கர், மாநகராட்சி ஆணை யர் என்.ரவிச்சந்திரன், மேயர்  கவிதாகணேசன், துணை  மேயர் தாரணி சரவணன்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.