districts

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் கூலிப்பிரச்சனை: ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

கரூர், மார்ச் 5- டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் இறக்கு கூலி உயர்வு  மற்றும் இதர  கோரிக்கைகளை வலி யுறுத்தி சென்னையில் ஏப்ரல் 12-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.  தமிழ் மாநில டாஸ்மாக்  சுமைப்பணி ஒருங்கி ணைப்புக்குழு கூட்டம் கரூ ரில் சம்மேளன துணைத் தலைவர் பிச்சைமுத்து தலைமையில் நடைபெற் றது. சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் துவக்கி வைத்தார். ஒருங்  கிணைப்புக் குழு கன்வீனர்  குணசேகரன் நடைபெற்ற வேலைகள் மற்றும் கோரிக் கைகள் குறித்துப் பேசினார். மாநிலத் தலைவர் வெங்க டபதி, சம்மேளன பொதுச் செயலாளர் ஆருள்குமார், சிஐடியு தமிழ் மாநிலச் செய லாளர் திருவேட்டை, மண்டல பொறுப்பாளர்கள் கோயம்புத்தூர் பீர்முகமது, மதுரை முகமதுல்லா, திருச்சிராப்பள்ளி ரமேஷ் கண்ணா, சென்னை ராதா கிருஷ்ணன், ஜீவானந்தம் கரூர் கிருஷ்ணமூர்த்தி, விநா யகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 43 டாஸ்மாக் குடோன் களில் பணிபுரியக்கூடிய சுமைப்பணி தொழிலாளர் களின் பிரதிநிதிகளாக 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பெரம்பலூர் டாஸ்மாக் சுமைப்பணி சங்க தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.  கூட்டத்தில் டாஸ்மாக்  குடோன்களில் பணிபுரி யக்கூடிய சுமைப்பணி தொழி லாளர்களுக்கான இறக்கு, ஏற்றுக் கூலி, வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்  பீடு, நிலுவையில் உள்ள பாக்கி தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி தொடர்  போராட்டங்களை நடத்து வது, மாநிலம் முழுவதும் உள்ள பெருவாரியான டாஸ்மாக் குடோன் சுமைப் பணி தொழிலாளர்களைத் திரட்டி ஏப்ரல் 12-ஆம் தேதி சென்னையில் ஆர்ப் பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.