கரூர், அக்.15 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டக் கிளையின் சார்பில் 5-வது வட்ட பேரவை கூட்டம் புகளூர் வட்டாட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டத் தலைவர் ஆர்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். வட்ட இனச் செயலாளர் புகழேந்தி வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் ஞானத்தம்பி சிறப்புரை யாற்றினார். மாவட்ட செயலாளர் கே.சக்தி வேல், மாவட்டத் தலைவர் எம்.சுப்பிரமணி யன், மாவட்ட துணைத் தலைவர் எம்,எஸ்.அன்பழகன், மாநில துணைத்தலைவர் செல்வராணி ஆகியோர் பேசினர். வட்டச் செயலாளர் கோபி வேலை அறிக்கையை முன்வைத்து பேசினார். வட்ட பொருளாளர் தாமோதரன் வரவு, செலவு அறிக்கையை முன்வைத்து பேசினார். வட்ட துணை தலைவர் பிச்சைமுத்து நன்றி கூறினார். கன்னியாகுமரி - காஷ்மீர் தேசிய நெடுஞ் சாலையில் கரூரை அடுத்துள்ள மண்மங்க லத்தில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுத்திட மேம்பா லம் அமைக்க வேண்டும். புகளூர் வட்டம், மூலிமங்கலம் கிராம பகுதியை சுற்றியுள்ள குக்கிராமப் புறங்களில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகள், கடைகள் மாணவர்கள் இணைய வழி கல்வி மற்றும் விவசாய பெரு மக்களின் பயன்பாட்டிற்காக செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த முறையில் பணிபுரியும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்கிட வேண்டும். அவர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை வாய்ப்புக்காக தமிழகம் வந்துள்ள வட மாநில தொழிலாளர்களின் குழந்தை களுக்கு, அவர்களின் தாய்மொழியில் கல்வி கற்க பள்ளிகளில் தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். என்.புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு சமையல் கூடம் இடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகி யும், இன்று வரை புதிய கட்டிடப் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. உடனடியாக புதிய சமையல் கூடம் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.