தருமபுரி, ஜூன் 15- இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 56 ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டக் கிளை முதல் மாநாடு நடை பெற்றது. இம்மாநாட்டுக்கு வட்ட தலைவர் பி.ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.சேகர் துவக்கி வைத்து பேசினார். வட்ட செயலாளர் பிரபாகரன், வட்ட பொருளாளர் ஆர்.சதாசிவம் ஆகி யோர் அறிக்கையை முன் வைத்துப் பேசினர். மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி, மாவட்ட துணை தலைவர் எம்.யோகராசு, மாவட்ட இணைச் செயலாளர் சி.காவேரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக, இம்மாநாட்டில் இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பை உரு வாக்கும் வகையில் சிப்காட் தொழிற் பேட்டை பணிகளை உடனே துவக் கப்பட வேண்டும். மாநிலத்தலை வர் மு.சுப்பிரமணியனின் பணியிடை நீக்கத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இளைஞர் களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 56 - ஐ ரத்துச் செய்யப்பட வேண்டும். ஜாக்டோ – ஜியோவின் 9- அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து புதிய வட்ட தலைவராக பி.சந்திரன், வட்ட செய லாளராக பி.பிரபாகரன், வட்ட பொரு ளாளராக ஆர்.சதாசிவம். வட்ட துணைத் தலைவர்களாக வடிவேல், மதலை முத்து, கி.கருணாநிதி, வட்ட இணைச் செயலாளர்களாக ஆனந் தன், சிவக்குமார், பராசக்தி மாவட்ட செயற்குழு உறுப்பினராக என்.யாரப்பாஷா, வட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளராக பெ.மகேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவர் எம்.சுருளி நாதன் நிறைவுரையாற்றினார். வட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் பெ.மகேஸ்வரி நன்றி கூறினார்.