districts

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மருந்தாளுநர் நலச் சங்கத்தினர் ரத்த கையெழுத்து இயக்கம்

கரூர், பிப்.27 - கரூரில் மருந்தாளுநர் நலச் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த கையெ ழுத்து இயக்கத்தை நடத்தினர். தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட  அரசாணை எண்.5-ஐ ரத்து செய்ய வேண்டும்.  அரசுத் துறையில் இருக்கிற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை பட்டய  மருந்தாளுநர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். மக்களின் நலன் கருதி மக்களை  தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்தாளுநர் கள் மூலமாக மருந்துகளை மக்களுக்கு வழங் குவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் நலக் கூட்டமைப்பின் கரூர் மாவட்ட குழு சார்பில் கருத்தரங்கம் தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் கே.நந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் எஸ்.பழனிச்சாமி வர வேற்று பேசினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரபிரபு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அனைத்து மருந்தாளுநர் நல கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எம்.ஆனந்தன் ரத்த கையெழுத்து இயக் கத்தை துவக்கிவைத்து பேசினார். மாநிலச் செயலாளர் கே.அன்பானந்தன், மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி அதில் ஒவ்வொருவரும் தங்களது ரத்த த்தால் கைரேகைகளை பதிவு செய்து ரத்த  கையெழுத்து இயக்கத்தை கரூர் மாவட்டத்தில் துவக்கியுள்ளனர். இந்த கையெழுத்து இயக்க  மனுவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினி டம் மாநில நிர்வாகிகள் வழங்குவார்கள் என  தெரிவித்தனர்.