கரூர் பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்களான குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்த 8 கடைகளுக்கு சீல் வைத்து, 17.5 கிலோ எடையுள்ள ரூ.20,000 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளுக்கு நேரில் சென்று கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டு, மாவட்ட ஆட்சியர் ஆய்வுமேற்கொண்டார்.