கரூர், மே 16 - நூல் விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்திட வேண்டும். பருத்தியை அத்தியாவசியப் பட்டியலில் சேர்க்க வேண்டும். பஞ்சு, நூல் ஏற்றுமதியை ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 16, 17 ஆகிய இரண்டு நாட்கள் கரூர் மாவட்டத்தில் ஜவுளி நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்கள் போராட்டம் வெற்றி பெறவும், கோரிக்கை களுக்கு ஆதரவு தெரிவித் தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.கந்தசாமி, ஜி.ஜீவானந் தம், பி.ராஜூ, கே.சக்திவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்