districts

பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கரூர், ஜன.7 - ஜன.14 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப் பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயி லாடுதுறை,  திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங் கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக் குடி, இராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்க ளுக்கு ஜனவரி 11, 12, 13 ஆகிய நாட்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் திருச்சியிலிருந்து  தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக் கும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூரி லிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும், கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் ஜன.11 முதல் ஜன.13 வரை  அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள்  பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேலும் ஜன.11 முதல் ஜன.13 வரை சென் னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக  பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 கும்கோணம், தஞ்சாவூர், பட்டுக் கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னி லம், திருவையாறு  தடபேருந்துகள், தாம்பரம்,  சானிடோரியம் (MEPZ), அறிஞர் அண்ணா  பேருந்து  நிலையத்திலிருந்தும், கரூர்,  திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங் கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, இராமநாதபுரம், இராமேஸ்வரம், பரமக்குடி,  மதுரை, கமுதி, முதுகுளத்தூர்,  நாகப்பட்டி னம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி,   வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம் பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்  பேருந்து  நிலையத்திலிருந்தும் இயக்கப்பட உள்ளன. மேலும் பொங்கல் முடிந்து திரும்ப அவர வர் ஊர்களுக்கு செல்ல 15.1.2022 முதல்  18.1.2022  ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்து கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட் மேலாண்மை  இயக்குனர் பி.ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

;