districts

img

கழுகூரில் புதிதாக கட்டிய பகுதி நேர ரேஷன் கடையை திறந்திடுக! விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜூலை 28- கரூர் மாவட்டம் தோகை மலை ஒன்றியம் கழுகூரில் புதிதாக கட்டப்பட்ட பகுதி  நேர ரேஷன் கடை கடந்த  நான்கு மாதமாக திறக்கப் படாமல் இருப்பதை கண்  டித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் தோகை மலை ஒன்றியக்குழு சார்பில் கழுகூர் பேருந்து நிறுத்தத்தி லிருந்து ஊர்வலமாக சென்று  கழுகூர் தொடக்க வேளா ண்மை கூட்டுறவு வங்கி முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணைத் தலைவர் எம்.பி. ரத்தினம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவ சாய சங்க மாவட்ட செயலா ளர் கே.சக்திவேல் கோரிக் கைகளை விளக்கி பேசி னார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஏ. பெருமாள், சங்க ஒன்றியச் செயலாளர் முனியப்பன், ஆர்.சங்கப் பிள்ளை உள்ளிட்ட நூற் றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கழுகூ ரில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பம் உள்ளது. இப்பகு தியில் புதிதாக கட்டப்பட்ட பகுதி நேர ரேஷன் கடை கடந்த நான்கு மாதமாக திறக்காமல் உள்ளது. புதிய கட்டிடத்தை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்  பாட்டிற்கு விட வேண்டும்.  இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்  ளிட்ட பல்வேறு அலுவலர் களிடம் கோரிக்கை மனு  கொடுத்தும் இன்று வரை நட வடிக்கை எடுக்கவில்லை.  எனவே, இதுகுறித்து அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப் பட்டது. அதிகாரிகள் இன் னும் 10 நாட்களில் புதிய கட்டிடத்தை திறப்பதாக உறுதி அளித்தனர். பத்து தினங்களுக்குள் கட்டிடம் திறக்கப்படாவிட்டால் தமிழ்  நாடு விவசாயிகள் சங்கம்  சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு காத்தி ருப்பு போராட்டம் நடத்தப்  படும் என சங்கத்தின் மாவட்  டச் செயலாளர் கே.சக்திவேல் தெரிவித்தார்.