கரூர்/பொன்னமராவதி, ஜூன் 10 - தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத் தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் பிரச்சார நடைப்பயணம் க.பரமத்தி கடைவீதியில் துவங் கியது. பிரச்சாரா பயணக்குழு கரூர், புலி யூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகை மலை வழியாக திருச்சியில் நடைபெறும் கோரிக்கை மாநாட்டில் நிறைவடைந்தது. கரூர் பேருந்து நிலையம் முன்பு வர வேற்பு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் வி.டி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் மு.சுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எம். செல்வராணி க.பரமத்தியில் நடைபெற்ற நடைப்பயண பிரச்சாரத்தை கொடியசைத்து துவக்கிவைத்தார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
பொன்னமராவதி
திருச்சியில் நடைபெறும் கோரிக்கை மாநாட்டை விளக்கி பொன்னமராவதியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின ரின் கோரிக்கை விளக்க பிரச்சாரம் நடை பெற்றது. பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பு தலைமை வகித்தார். மாநில செயலாளர்கள் மலர்விழி, சக்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பிரச்சாரத்தில் திமுக அரசு தனது தேர்தல் கால வாக்குறுதிப்படி காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங் களை வழங்கினர்.