கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் மாவத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கீதாசெந்தில்மோகன் தலைமை வகித்தார். கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ராணி, ஊராட்சி மன்ற துணை தலைவர் பிரபாகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி, ஊராட்சி மன்ற செயலர் அன்பழகன் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.