districts

கரூர், புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

மக்கள் குறைதீர் கூட்டங்கள் ஒத்திவைப்பு மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
கரூர், ஜன.9 - கொரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்காக தமிழக அரசின் உத்தரவின்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வந்த மக்கள் குறைதீர்க்கும் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் வகையிலான கூட்டங்கள் அனைத்தும்  தற்காலிகமாக மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படு கின்றன.  எனவே, பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான  விண்ணப்பங்களை தபால்கள் மூலமாக அனுப்பி வைக்க லாம். மேலும் தங்களது மனுக்களை https://cmhelpline.tnega.org/portal/en/home என்ற இணையதள முகவரியில்  பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனை வரும் இந்த இணையதள வசதியினை பயன்படுத்தி மனுக் களை அனுப்பி, மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா தடுப்பு  தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும்.  மேற்கண்ட தகவலை கரூர் மாவட்ட ஆட்சியர் மரு. த.பிரபுசங்கர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர், அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளனர்.

மேலஸ்தானம் அரசுப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையம் திறப்பு
அறந்தாங்கி, ஜன.9 - புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சாமி சத்தியமூர்த்தி வழிகாட்டுதலின்படி, மண மேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலஸ்தானம் நடுநிலைப்  பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார் வையாளர் (பொ) சிவயோகம் தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராம லிங்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவி சீதாலெட்சுமி முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் வாசுகி  வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக இல்லம் தேடி  கல்வித் திட்ட மாவட்டக்குழு உறுப்பினர் மற்றும் பார்வையா ளர் மு.முத்துக்குமார், திட்ட மாநில கருத்தாளர் மு.சாமியப் பன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலா ளர் முனைவர் ஆர்.பிச்சைமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் மா.சிவானந்தம், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ்  பங்கேற்றனர். ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.