districts

img

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 418 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி

கரூர், அக்.14 - கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் 418 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ சிவகாமசுந்தரி வழங்கினார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்டம், சின்னசேங்கல், சின்னம்மநாய க்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் 481 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி சிறப்புரையாற்றி, அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், தமிழக முதல்வர் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக பல்வேறு பயனுள்ள திட்டங்களை செய்து வருகிறார். மாணவர்கள் இந்த திட்டங்களைப் பயன்படுத்தி, தங்களது வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதற்கு நன்றாக படிக்க வேண்டும்.  மாணவ, மாணவிகள் படிப்புடன் சேர்ந்து, விளையாட்டிலும் பங்கேற்று, சாதனைகளை படைக்க வேண்டும்” என்றார். கரூர் மாவட்ட கல்வி அலுவலர் கன்னிச்சாமி, திமுக கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவிராஜா, கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி தலைவர் சேதுமணி மகாலிங்கம், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி தலைவர் சௌந்தரப்பிரியா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.