கரூர், ஏப்.25 - தையல் தொழிலாளர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழுவின் சிறப்பு பேரவை கரூர் சுங்ககேட் சிஐடியு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட கௌரவத் தலைவர் ஆர்.ஹோச்சுமின் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் சி.முருகேசன் பேரவை கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். தையல் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொருளாளர் எம்.மாலதி சிறப்புரையாற்றினார். புதிய மாவட்ட கௌரவ தலைவராக ஆர்.ஹோச்சுமின், மாவட்ட தலைவராக கே.ராஜா, மாவட்ட செயலாளராக வி.செந்தில்முருகன், மாவட்ட பொருளாளராக எஸ்.கணேசன் உள்ளிட்ட 13 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது, உள்ளாட்சி சங்க மாவட்ட செயலாளர் கா.கந்தசாமி, டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கட்டுமான சங்க தலைவர் ப.சரவணன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராஜேஸ்வரி, ஆட்டோ சங்க தலைவர் என்.ரெங்கராஜ், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கண்ணகி ஆகியோர் கூட்டத்தில் பேசினர். தையல் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி ரூ.700 வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர் நல வாரியம் போல, தையல் தொழிலாளர் நலவாரியம் அமைத்திட வேண்டும். வீடு கட்ட ரூ.4 லட்சம் மானியம் வழங்க வேண்டும். 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் தொழிலாளர் சட்டங்களை கறாராக அமல்படுத்த வேண்டும். ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் போனஸ், பிஎஃப், இஎஸ்ஐ உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.