கரூர்,டிச.4- தமிழ்நாடு மின் வாரியத் தில் காலியாக உள்ள பணி யிடங்களை நிரப்ப வேண்டும், 1.12.2023 முதல் மின்வாரிய பணியா ளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க பேச்சு வார்த்தை யை உடனடியாக துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐ டியு) சார்பில் கரூர்,பெரம்ப லூரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
கரூர் மாவட்ட மேற் பார்வை பொறியாளர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு சங்க மாவட்ட தலை வர் ஜி.ஜீவானந்தம், அமைப்பின் மாநில செயலா ளர் க.தனபால், மின் வாரிய பொறியாளர் அமைப்பின் மாநில துணைத்தலைவர் ஜி.கோபாலகிருஷ்ணன், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் ப.சரவணன் ஆகி யோர் பேசினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் திருவாரூரில் மேற்பார் வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு திட்ட தலைவர் எஸ். சகாயராஜ் தலைமை வகித்தார், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், தலைவர் எம்.கே.என்.அனிபா, திட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், பொரு ளாளர் ஜி.ஆர்.முகேஷ் ஆகி யோர் கண்டன பேசினர். இதில் திருவாரூர், மன்னார் குடி சார்ந்த திட்ட மற்றும் கோட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.