districts

img

மின் கட்டணம் உயர்வை திரும்பப்  பெறக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கரூர், ஆக.11- மின் கட்டணம் உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியக்குழு சார்பில் புகளூர் மின்வாரிய அலுவலகம் முன்பு கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.பூரணம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எம்.ராஜேந்திரன் விளக்கிப் பேசினார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் நடராஜன், பொன் கந்தசாமி, புகளூர் நகர் மன்ற உறுப்பினர் இந்துமதி, கிருஷ்ணவேணி, ஜோதி, குணசேகரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;