கரூர், ஏப்.7- கோகுல்ராஜ் கொலை வழக்கில் வழக்கில் சிறப்பாக வாதாடிய மூத்த வழக்க றிஞர் ப.பா.மோகனுக்கும், அவருடன் வழக்கில் பயணித்த வழக்கறிஞர் பார்த்தி பனுக்கும் தலித் விடுதலை இயக்கம், சமநீதிக் கழகம் சார்பில் கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள ரவீஸ் கூட்ட அரங்கில் பாராட்டு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலித் விடுதலை இயக் கத்தின் மாநில தலைவர் ச.கருப்பையா தலைமை வகித்தார். சமநீதி கழகத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் இரா.அண்ணாத்துரை வரவேற்று பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி, சிபிஐ மாவட்ட துணைத்தலைவர் மோகன் ராஜ், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் நிலவழ கன், சமுக செயல்பாட்டாளர் வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன், தலித் விடுதலை இயக் கத்தின் மாநில துணைத்தலைவர் தலித் இராசகோபாலா ஆகியோர் கூட்டத்தில் பேசினர். சமநீதி கழக செய்தி தொடர்பாளர் இரவிச்சந்திரன் நன்றி கூறினார்.