districts

img

சிபிஎஸ்இ பள்ளி இறுதி பொதுத்தேர்வு: பரணி வித்யாலயா பள்ளி தேசிய சாதனை

கரூர், ஜூலை 25 - சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி இறுதி  பொதுத்தேர்வில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் அபார சாதனை புரிந்து கரூர் மாவட்டத் திற்கு தேசிய அளவில் பெருமை தேடித் தந்துள்ளனர். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி அக்சயா  497 மதிப்பெண் மற்றும் கணிதம், அறிவியலில் 100/100  மதிப்பெண் பெற்று தேசிய அளவில் சாதனை புரிந்துள்ளார். மேலும் மாணவர் ஹரிஸ்குமார் 489  மதிப்பெண், கணிதம், அறிவியலில் 100/100 மதிப்பெண் ணும், மாணவி ரிதன்யா 482 மதிப்பெண்ணும், மாணவி சம்யுக்தா 478 மதிப்பெண்ணும், மாணவர் தீபக், ராகுல் மற்றும் மாணவி திவ்யா ஆகியோர் 476  மதிப்பெண்ணும், பிரதிக்ஷா சமூக அறிவியலில் 100/ 100 மதிப்பெண்ணும், வித்யாபிரியா தமிழில் 100/100 மதிப்பெண்ணும் பெற்று சாதனை புரிந்துள்ளனர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடப் பிரிவில் மாணவி தக்ஷின்யா 488 மதிப்பெண் மற்றும் ஐ.பி பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளார். கலை பாடப்பிரிவில் மாணவிகள் அஸ்வதி, சுவாதிகா 483 மதிப்பெண் மற்றும் வணிகவியலில் 100/100 மதிப் பெண்ணும் பெற்றுள்ளனர்.

அறிவியல் பாடப்பிரிவில் மாணவி சிந்துஜா 467 மதிப்பெண் மற்றும் இயற்பியல் மற்றும் வேதியியலில் 100/100 மதிப்பெண்ணும், மாண வர் லோகேஷ் 479 மதிப்பெண் மற்றும் ஐ.பி பாடத்தில்  100/100 மதிப்பெண்ணும், மாணவர் முகேஷ் 466 மதிப் பெண் மற்றும் வேதியியலில் 100/100 மதிப்பெண் ணும் பெற்றுள்ளனர். தேசிய கேலோ இந்தியா டென்னிசில் தங்கப்பதக்க மும், முதலமைச்சர் கோப்பை டென்னிஸ் போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்று கரூருக்கு பெருமை சேர்த்த மாணவி ஜனனி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 449  மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார். தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களுக் கும், அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த  பரணி கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன், முதல்வர் சு.சுதாதேவி, துணை முதல்வர் ரா.பிரியா, ஒருங்கிணைப்பாளர் சி. ஜெர்லின் கிரிஸ்டல் மற்றும் இருபால் ஆசிரியர் களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.  பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சா.மோகனரங்கன் தலைமை வகித்தார். சாதனை புரிந்த மாணவர்களுக்கும் ஆசிரியர் களுக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது.