கரூர், ஜூலை 25 - மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி அனைத்து தொழிற் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த துடிக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் விளைப் பொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்காமல் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் புத னன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்டத் தலைவர் வி.ஆர்.அண்ணாவேலு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஜி.பி.எஸ்.வடிவே லன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் எம். பால்ராஜ். ஹெச்எம்எஸ் மாவட்டச் செயலா ளர் ஆனந்தராஜ், எல்எல்எப் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் மா.சுடர்வளவன், விவசாய சங்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜ சேகர், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
அரியலூர்
அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலர் த.தண்டபாணி, தொமுச மாவட்டச் செயலர் ஆர்.மகேந்தி ரன், சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் டி.விஜய குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
திருவாரூர்
திருவாரூர் தலைமை தபால் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டத் தலைவர் வி.குருநாதன், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, ஐஎன்டியுசி மாநில அமைப்பு செய லாளர் பா.ராஜிவ்காந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் மாவட்டச் செயலா ளர்கள் சிஐடியு டி.முருகையன், ஏஐடியுசி ஆர்.சந்திரசேகர ஆசாத், பா.தமிழராசன், எஸ்.மணியரசன் மற்றும் பலர் உரை யாற்றினர்.