கன்னியாகுமரியில் நடைபெற உள்ள சிஐடியு மாநில மாநாட்டிற்கு உதவி பொதுச் செயலாளர் வி.குமார் தலைமையில் கொண்டு செல்லப்படும் வி.பி.சிந்தன் நினைவு ஜோதிக்கு மீஞ்சூரில் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் கே.விஜயன், மாநில துணைத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், பொருளாளர் என்.நித்தியானந்தம், எஸ்.ஏ.கலாம் (எல்ஐசி முகவர் சங்கம்), எம்.நாகராஜ் (கட்டுமானசங்கம்), வெங்கடேசன், ெஜயவேல் (மின் ஊழியர் மத்திய அமைப்பு), ஏ.ஜி.சந்தானம் (உள்ளாட்சி ஊழியர் சங்கம்), கே.அர்ஜூனன் (பொறியாளர் சங்கம்), எம். சந்திரசேகரன் (ஆட்டோ சங்கம்), கே.சுந்தரைய்யா (கைத்தறி நெசவு சங்கம்) உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.