அருமனை, ஏப்.23- கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் சலனம் காரணமாக சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெள்ளியன்று அருமனை சுற்றுவட்டாரப் பகுதி களில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் குளங்கள், கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. அருமனை பேரூ ராட்சிக்கு சொந்தமான குழவிக் குளம் நிரம்பியதால் சாலை ஓரம் இருந்த ஐந்து தென்னை மரங்களு டன் சாலை பெயர்ந்தது. இப்பகுதியினை அருமனை பேரூராட்சித் தலைவர் லெதிகா மேரி, வார்டு கவுன்சி லர்கள் ஆமோஸ், அனிதா செலின், ஜெய ராணி, கட்டுமானத் தொழிற்சங்க அருமனை வட்டாரச் செயலாளர் புஸ்பராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.