districts

img

உண்ணாமலைக்கடையில் புறக்கணிக்கப்பட்ட நீரோடை நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிர்வாகம்

திருவட்டார், ஜன.27- கன்னியாகுமரி மாவட்டம்   உண்ணாமலைக் கடை பேரூராட்சி 7-ஆவது வார்டுக்குட்பட்ட மாங்காவிளை பகுதியில் 10 வருடங்களுக்கு மேல் நீரோடை தூர் வாராததால் மழை காலங்களில் ஒரு குளத்திலிருந்து அடுத்த குளத்திற்கு செல்லும் மழை நீரானது வீடுகளுக்குள் புகுந்து மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கிறது.இரவு நேரங்களில் மழை பெய்தால் வீட்டில் உள்ள வர்கள்  தூங்காமல் விழித்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் வீடுகள் இடியும் அபாயமும் ஏற் பட்டுள்ளது. எனவே இது சம்பந்தமாக சிபிஎம் உண்ணா மலைக்கடை கிளை சார்பாக பேரூராட்சி தலைவர்மற்றும் வார்டு உறுப்பினரிடம் மனு கொடுத்து நீரோடை தூர் வாரவும், நிதி ஒதுக்கீடு செய்து அகலபடுத்தவும், சாலையின் பள்ளமான பகுதியில் மழைநீர் தேங்குவதால் அதை செப்ப னிட்டு சாலையை சீர் செய்ய கேட்டு மனு கொடுத்து பல மாதங்களாகியும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக  தற்போது பணியில் உள்ள செயல் அலுவலரிடம் மீண்டும் புகார் கொடுக்கப்பட்டது. மனு கொடுக்கும் நிகழ்ச்சியின் போது சிபிஎம் உண்ணாமலைக்கடை கிளை உறுப்பினர் மெர்சா, செயலாளர்  சுபின் குமார் ,  விபின் ஆகியோர் கலந்து கொண்டனர்.