நாகர்கோவில், ஏப். 8 கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் சங்கத்தில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரி யர் அலுவலர் கூட்டமைப் பின் கூட்டம் நடைபெற்றது. இதில் மாணவர் மற்றும் ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தமுடிவு செய்யப்பட்டது. அரசு அனுமதித்த காலிப் பணியிடங்களில் ஊதிய மின்றிப் பணிசெய்யும் ஆசிரியர்களுக்கு ஊதி யம் வழங்கிட வேண்டும், மாணவர் உயர் கல்விக்கான 7.5சதவீத இட ஒதுக்கீடு, மாணவியருக்கு அறிவித் துள்ள ரூ.1000 ஊக்கத் தொகை ஆகியவை அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும், டபிள்யு எ (எம் டி) எண்.76 of 2019 நாள் 31.03. 2021 நாளிட்ட தொகுப்பு வழக்குத் தீர்ப்பினை முழு மையாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை நிறைவேற்றுமாறு கூட்டத்தில் அரசுக்கு வலி யுறுத்தப்பட்டது. பின்னர் செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரி யர் அலுவலர் கூட்டமைப்பின் மாநில பொது செயலா ளர் த.கனகராஜ் கூறுகை யில், இந்த மூன்று கோரிக் கைகளை வலியுறுத்தி வரக் கூடிய கல்வி மானியக் கோரிக்கை நாளில் அதாவது ஏப்ரல் 11 அன்று மாநிலம் முழுக்க அனைத்து உதவி பெறும் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் நிர்வாகத் தின் ஒத்துழைப்போடு கோ ரிக்கை அட்டை அணித்து கல்வி வளாகங்களுக்கு செல்வது என முடிவெடுத் துள்ளோம். இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தவில்லை என்றால் அடுத்த கட்டமாக எங்களு டைய மாநில அமைப்பு ஒத்த கருத்துடைய பல்வேறு அமைப்புகளோடு இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப் போம் என்றார். இந்நிகழ்வில் மாநில துணை பொதுச்செயலாளர் சிவஸ்ரீ ரமேஷ், மாநில செய்தி தொடர்பாளர் டோமினிக் ராஜ், மாநிலத் துணை தலை வர் ஜே கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.