நாகர்கோவில், ஏப்.2- கன்னியாகுமரி மாவட் டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட சமத்துவ புரம் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஜெயக்குமாரின் மகள் செல்வி அபிநயா இரண்டாமாண்டு இளங் கலை பல் மருத்துவ சிகிச்சை பிரிவு சென்னையில் பயின்று வருகிறார். மாணவியின் ஏழ்மை நிலையினை கருத்தில் கொண்டு மருத்துவ மேற் படிப்பிற்கு உதவிபுரியுமாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அவர்களிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவரின் விருப்ப நிதியின் கீழ் மாணவி அபிநயா வுக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பிலான காசோ லையினை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் வழங் கப்பட்டது.