நாகர்கோவில், பிப்.20- கன்னியாகுமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 65.95 சதவிகி தம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. மாநகர் மற்றும் நகராட்சிகளைவிட பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாக உள்ளது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, கொல்லங்கோடு, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய 4 நகராட்சிகள், 51 பேரூ ராட்சிகளுக்கான வாக்குப்பதிவு சனி யன்று (பிப்.19) நடைபெற்றது. அனைத்து பகுதிகளிலும் விறுவிறுப் பாக வாக்குப்பதிவு நடந்தது.
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளன. இதில் மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 399 வாக்கா ளர்கள் உள்ளனர். 52 வார்டு கவுன்சி லர் பதவிக்கு 356 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக 233 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட் டன. மாலை 6 மணி நிலவரப்படி ஆண் வாக்காளர்கள் 74,593 பேரும், பெண் வாக்காளர்கள் 76,177 பேரும் என மொத்தம் 1,50,770 வாக்காளர்கள் வாக்களித்தனர். அதன்படி 60.94 சதவி கிதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
நகராட்சிகள்
கொல்லங்கோடு நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. மொத்தம் 51 ஆயிரத்து 666 வாக்கா ளர்கள் உள்ளனர். 33 வார்டுகளுக்கு 165 பேர் போட்டியிட்டனர். இதற்காக 63 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டி ருந்தன. இங்கு மொத்தம் 31, 645 பேர் வாக்களித்தனர். இது 61.34 சதவிகி தம் ஆகும். குளச்சல் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. மொத்தம் 23 ஆயி ரத்து 223 வாக்காளர்கள் உள்ளனர். 78 பேர் போட்டியிட்டனர். 34 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 14, 599 பேர் வாக்களித்தனர். இது 62.86 சதவிகிதம் ஆகும். குழித்துறை நகராட்சியில் 21 வார்டு கள் உள்ளன. மொத்தம் 18 ஆயிரத்து 376 வாக்காளர்கள் உள்ளனர். 83 பேர் போட்டியிட்டனர். 22 வாக்குச்சாவ டிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 11, 804 பேர் வாக்களித்த னர்.இது 64.24 சதவிகிதம் ஆகும். பத்ம நாபபுரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. மொத்தம் 17 ஆயிரத்து 253 வாக்காளர்கள் உள்ளனர். 111 பேர் போட்டியிட்டனர். 21 வாக்குச்சாவடி கள் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 11, 732 பேர் வாக்களித்த னர். இது 68 சதவிகிதம் ஆகும்.
பேரூராட்சிகள்
51 பேரூராட்சிகளில் 828 வார்டு களுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இவற்றில் ஆண் வாக்காளர்கள் 3,38, 746 பேரும், பெண் வாக்காளர்கள் 3,41, 425 பேரும், திருநங்கைகள் 46 பேரும் என மொத்தம் 6 லட்சத்து 80 ஆயிரத்து 217 வாக்காளர்கள் உள்ளனர். 4 வார்டுகளின் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட னர். மீதமுள்ள 824 வார்டுகளுக்கு 3,573 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 4,64,009 பேர் வாக்களித்தனர். இது 68.21 சதவிகிதம் ஆகும்.
செவ்வாயன்று வாக்கு எண்ணிக்கை
பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங் கள் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரல்வாய் மொழி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அகஸ்தீஸ் வரம் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொல்லங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி, மார்த்தாண்டம் நேசமணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆற்றூர் கல்லூரி, பத்மநாபபுரம் அரசு மேல்நி லைப்பள்ளி ஆகிய 8 மையங்களில் உள்ள 18 பாதுகாப்பு அறைகளில் பாது காப்பாக வைக்கப்பட்டன. அந்த பாது காப்பு அறைகளும் பூட்டி சீல் வைக்கப் பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பிப்.22 ஆம் தேதி காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும்.