districts

img

கடலூரில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை

கடலூர், ஜூன் 6- கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக மழை ஓய்ந்து கடும் வெயில் தாக்கம் இருந்து வந்தது.

வியாழக்கிழமை காலை வெயில் கடுமை யாக இருந்த நிலையில், பிற்பகலுக்குப் பிறகு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 3:30 மணி முதல் திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்யத் துவங்கி யது. ஏறத்தாழ 2 மணி நேரம் கனமழை பெய்தது. கடலூர், சிப்காட், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த மழை மிக கனமழையாக பெய்தது. பல்வேறு இடங்களிலும் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிய நிலையில் வாகன ஓட்டி கள் மழை காரணமாக முகப்பு விளக்கு எரியவிட்டபடி சென்றனர். வெப்பத் தாக்கத்திலிருந்து வந்த மக்களுக்கு இந்த மழை ஒரு வரப்பிரசாதமாக அமைந்து குளிர்ந்த காற்று வீசத் துவங்கியது.