districts

தடையை மீறி சுருக்குமடி வலை: அதிகாரிகள் பறிமுதல்

கடலூர், ஜூலை 7- சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது என தமிழக அரசு தடை உத்தரவு அறிவித்து உள்ளது. அதன்படி கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நட வடிக்கை எடுப்பதோடு மீனவர்க ளுக்கு வழங்கக்கூடிய சலுகைகள் வழங்கப் படாது என கடும் எச்ச ரிக்கை விடுத்து வந்தார்.  மேலும் கடலூர் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகள் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீனவர்கள் ஏதேனும் மீன் பிடிக்கிறார்களா? என்பதனை தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர். மீன்வளத்துறை உதவி இயக்குநர் சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வாளர் சதுருதீன், சார் ஆய்வாளர் பிர பாகரன், மீன்வள மேற்பார்வை யாளர் மயில்வாகனன், காவலர் சாம்பசிவம் ஆகியோர் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தடை செய்யப் பட்ட சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடித்தது தெரிய வந்தது. இந்த நிலையில் மீன்வளத்துறை அதிகாரி கள் மற்றும் காவலதுறையினர் விசைப்படகு மற்றும் வலையை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.  அப்போது ராசா பேட்டை சேர்ந்த மீனவர்கள் அதிகாரிகளை அவதூறாக பேசியும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.