districts

img

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

கடலூர், ஜன. 3- போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்க ளுக்கு ஆப்சென்ட் போட்ட நிர்வாகத்தை கண்டித்து சிஐ டியு அமைப்பினர் பாய், தலைய ணையுடன் கடலூர் மண்டல மேலாளர் அலுவலகத்தில் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்  காக சிஐடியு சார்பில் நடைபெற்ற இயக்கத்தில் வார விடுமுறை மற்றும் விடுப்பு எடுத்து  கலந்துகொண்ட தொழிலாளர்களுக்கு ஆப்சென்ட் போட்டதற்கு நீதி கேட்டு பாய், தலையணை மற்றும் போர்வை யுடன் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி புதனன்று (ஜன. 3) கடலூர் போக்குவரத்து அலுவலக பொது மேலாளர் அலுவலகம் முன்பு சிறப்பு தலைவர் ஜி.பாஸ்கரன் தலைமையில் மண்டலத் தலைவர் மணிகண்டன், துணை பொதுச் செயலாளர் ராம மூர்த்தி, கண்ணன், துணைத் தலை வர்கள் முத்துக்குமார், நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ள னர். பிரச்சனைக்கு தீர்வு காண வில்லை என்றால் அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.