districts

அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கடலூர்,ஏப்.21- கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முகுந்தன், ரவிச்சந்திரன், பிரான்சிஸ் ஆகியோர்  கடலூர் பேருந்து நிலையத்தில்  ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக் கூடிய காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இருந்து காற்று ஒலிப்பான்களை காவலர்கள் துணையுடன் அகற்றினர்.  இது பற்றி வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் கூறுகையில்,“கடலூர் மாவட்டம் முழுவதும் அதிக ஒலி எழுப்பக் கூடிய காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்து வருகிறோம். அதன் ஒருபகுதியாக இந்த ஆய்வு பணிகள் நடந்தது” என்றார்.